2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக 31 முறைப்பாடுகள்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்த ஆண்டு பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளதாக” இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

“பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து தாக்கப்பட்டமை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன.  இது கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது.  இலங்கையில் சித்திரவதை குற்றமாக உள்ள நிலையிலையே சித்திரவதைக்கு எதிரான முறைப்பாடுகள் கிடைக்க பெற்று வருகின்றன.

அத்துடன் சட்டத்துக்கு புறம்பாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X