2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதுபானம் விற்பனை: இருவர் கைது

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கையில், சகல மதுபானசாலைகளுக்கும் 2 நாள்கள் பூட்டப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர், விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - முடமாவடி மதுபானசாலைக்கு முன்பாக வைத்து, இன்று காலை 8 மணியளவில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 450 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .