2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் பரிசோதனை

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூலை 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில், முதன் முறையாக 10 இடங்களில், இன்று (12) காலை, எச்.ஐ.வி தொற்று நோய்க்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றுக் காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணிவரை, தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில், இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டப் பிரதிப் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் எஸ்.என்.கில்றோய் பீரீஸ் தலைமையில், குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேச எச்.ஐ.வி தினத்தை, இந்த வருடம் மன்னாரில் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே, குறித்த பரிசோதனைகள், மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 10 இடங்களில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .