2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரக்கறி மூடைகளுக்குள் கஞ்சா கடத்த முயற்சி

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூடைகளுக்குள் 6 கிலோகிராம் கஞ்சா கடத்த முற்பட்டக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவன் பகுதியில், கஞ்சா கடத்தப்படுவதாக, சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .