2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்’

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக  போட்டியிடுவதுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று (04) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நேற்று (04) நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .