2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மேலதிக நேர கொடுப்பனவுகளை இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மே 24 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான நிலுவையிலுள்ள மேலதிக நேர கொடுப்பனவுகளை இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் நீண்ட காலமாக வழங்கப்படாத நிலையில் நிலுவையில் காணப்பட்டது.

குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகதார அமைச்சு மத்திய அரசுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. எனினும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பும் இடம் பெற்றது.

எனினும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாகாண திறைசேரிக்கு நிதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக மாகாண திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குரிய நிலுவைகளை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாகாண திறைசேரியில் இருந்து இவ்வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் மத்திய திறைசேரியினால் மாகாண திறைசேரிக்கு குறித்த பணம் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X