2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மைத்திரியின் கத்தி ரணிலைக் காப்பாற்றியுள்ளது’

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“ஜனாதிபதியின் கத்தி ரணிலைக் காப்பாற்றியுள்ளது” என்று மக்கள் விடுதலை முண்ணணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபைக்கு ஜே.வி.பி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு, நாவற்குழி, 300 வீட்டுத்திட்டப் பகுதியில், நேற்று (03) மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் தெரியாது என்று ஜனாதிபதி கூறினார். ஆனால், அவரது கத்தியில் ரணில் வெட்டுப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

“மக்களுக்கு தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது.  அதில் 11 கோடி ரூபாய் சூரையாடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.ரணில் தொடர்பில் அவரை நியமித்தது தொடர்பாக மட்டுமே கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .