2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணம் மாநகரில் சுத்திகரிப்புப் பணி

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் மாநகரில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி, ஜூலை 12ஆம் திகதி காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில், 250 படையினரின் பங்களிப்புடன் இந்த யாழ்.மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இப்பணி, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் தெரிவுசெய்யப்பட்ட 9 பிரதான வீதிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில், இந்தப் பணி இடம்பெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .