2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் நீதிமன்றக் கட்டளையை மீறி, சட்டவிரோத அட்டகாசத்தை அரங்கேற்றிய ஞானசாரதேரர் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (05) முற்பகல் 10 மணி முதல் யாழ். நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

டெலோவின் (தமிழ் ஈழ விடுதலை இயக்கம்) ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி ஆர்ப்பாட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .