2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் இன்றும் வீடு புகுந்து கொள்ளை

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில், மானிப்பாய் கிழக்கு பகுதியில் தனிமையில் வாழ்ந்த 70 வயதான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருடி சென்றிருக்கின்றனர். 

இந்த சம்பவம் இன்று (11) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், படுக்கையல் இருந்த மூதாட்டியின் வாயை பொத்தி அமுக்கி பிடித்துள்ளனர்.

இதன்போது, 6 பவுண் தங்க நகை,  மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X