Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 19 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயுள்ளனர்.
இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.
பத்து வயதைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் நேற்று (18) மாலை முதல் இவ்வாறு இருந்து காணாமல் போயுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவர்கள் மாலை வரை வீட்டுக்கு வராத நிலையில், ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.
இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிஸார் தற்போது நாகர்கோவில்ப் பகுதிக்குச் சென்று மீண்டும் அப்பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.
காணாமல் போனோர் விவரம்
கலியுகமூர்த்தி மதுசன் (10 வயது)
புஸ்பகுமார் செல்வகுமார் (10 வயது)
சந்தியோ தனுசன் (17 வயது)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Apr 2024
19 Apr 2024