2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் மழை: 33 பேர் பாதிப்பு

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.ராஜ்

இன்று காலையிலிருந்து, யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தெல்லிப்பளை - மருதங்கேணி, சாவகச்சேரி,பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 08 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் கூறினார்.

மேலும், குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X