Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையாதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேரை, யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர்.
கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 22 - 24 வயதுடையோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (15) மூவரை பொலிஸாரால் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டதுடன், ஒருவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே, இன்று (16) மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும், ஆறுகால்மடத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago