2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டுள்ளது

சொர்ணகுமார் சொரூபன்   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும் (21) இன்றும் (22) இடம்பெறவிருந்த கல்விசாரா ஊழியர்களுக்கான விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் இடம்பெறும் என யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு எழுத்துப்பரீட்சையில் சித்தி பெற்றோருக்கான நேர்முகத்தேர்வு நேற்றும் (21), இன்றும் (22) இடம்பெறவிருந்தது.

புதிய ஆளணியினை உள்வாங்குவதுக்கு முன்னர், அதே பணியில் உள்ள தம்மை ஒரே தரப்படுத்தலுக்குள் உள்வாங்கவேண்டும் எனவும் அதுவரையில் புதியவர்களுக்கான நேர்முகத் தேர்வை பிற்போடுமாறும் தெரிவித்து கல்விசாரா ஊழியர்கள் நேற்று (21) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேர்முகத் தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .