2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

பகிடிவதை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே குறித்த மோதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக வாயிலில் மோதிக்கொண்ட மாணவர்கள் அங்கிருந்து நகர்ந்து பரமேஸ்வரா சந்திவரை சென்று அங்கும் மோதிக்கொண்டுள்ளனர்.

கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியால் போக்குவரத்தில் ஈடுபட்டோர் சிரமத்துடனும் பயத்துடனும் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு இரு பொலிஸாரே வந்துள்ளனர். அவர்களால் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலை காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .