2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘யாழ்.மாநர முதல்வர் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு’

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற பிரேரணையை சபையில் எடுக்கமாட்டேன் என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பிடிவாதம் பிடித்தமையால்; சபையில் ஏனைய உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக முதல்வர் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

யாழ்.மாநகர சபை அமர்வு இன்று (12) முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரக் கோருவதும், தமிழ் தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பைக் கோருதல் என்ற பிரேரணையை சமர்ப்பித்திருந்தேன். அந்தப் பிரேரணை இன்றைய கூட்டத்தொடரில் இணைக்கப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தப் பிரேரணையை தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இணைக்குமாறு மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்;னோல்டிடம் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது, சபையின் தேவை கருதியும், மக்களின் தேவை கருதியும் சபையில் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென உறுப்பினர் ஒருவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் பிரதி முதல்வரினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை அவசியமானதென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அத்துடன், இந்தப் பிரேரணையின் முக்கியத்துவம் சார்ந்து இந்தப் பிரேரணைக்கு வலுச்சேர்க்க தாம் விரும்புவதாகவும் உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட முதல்வர் இந்தப் பிரேரணை சபையில் எடுப்பதில்லை என உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம். அதற்கமைவாக இந்தப் பிரேரணையை சபையில் எடுக்கவில்லை. அவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டபோது, பிரேரணை சமர்ப்பித்த பிரதி முதல்வரும் உடனிருந்தார் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

ஏனைய உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை சபையில் விவாதிக்க வேண்டாமென கூறினால், அந்தப் பிரேரணையை சபையில் எடுக்கமாட்டீர்களா என பிரதி முதல்வர் ஈசன், முதல்வரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

இது தனிப்பட்ட பிரேரணை அல்ல. ஒரு பொதுவான பிரேரணை என்பதன் அடிப்படையில், எமது கட்சி அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடமிருந்து இந்தப் பிரேரணையை எடுக்குமாறு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை. ஆகையினால், இந்த விடயம் தெரிந்த நீங்களும், இந்த சபையில் எடுத்து சர்ச்சைக்குரிய விடயம் ஆக்க வேண்டாமென முதல்வர் சபையில் தெரிவித்தார்.

இதன்போது, 45 உறுப்பினர்களையும் இணைத்து செயற்பட விரும்பினால், நாங்கள் உங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும் என உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இவ்வாறு உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்த போதிலும், முதல்வர் தனது கொள்கையில் இருந்து மாறவில்லை. இந்தப் பிரேரணை எடுக்காத காரணத்தினால், சபையில் உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றன.

இருந்தும், குறித்த பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுக்கமாட்டேன் என உறுதியாக தெரிவித்ததுடன், அடுத்த பிரேரணை தொடர்பான விவாதத்தை முன்னெடுத்தார்.

இருந்தும், பிரேரணை தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் சபையில் கூச்சல் குழப்பங்களுடன் சபை அமர்வு இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .