2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) நடைபெற்றது.

மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திணைக்கள உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனொல்ட், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .