2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் .ராஜ்

யாழ்ப்பாணம் - பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால், அதன் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியது.

அத்துடன், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைக்கும் கராஜ்ம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து, யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த இடத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X