2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரயில் விபத்து : ஒருவர் பலி

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பரந்தன் ரயில் நிலையத்துக்கு அண்மையாக இன்று (05) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட நபரை, இன்று (05) காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியுள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .