2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியலை, எதிர்வரும் 04ஆம் திகதி வரை நீடித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், இன்று (22) உத்தரவிட்டார். 

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரைத் தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட லலித் ஜெயசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று (22) மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிடக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .