Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 21 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை, ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்க வேண்டும் என, வடமாகாணக் கல்வி அமைச்சு, அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாடசாலை மட்டத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான பயிற்சிகளை உரிய முறையில் வழங்கி, ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்குள் நடத்தி முடிப்பதுடன், இதிலிருந்து கோட்டமட்டத்தில் நடைபெறும் மெய்வன்மை அணிகளைத் தெரிவு செய்வதுடன், அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
“பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கான தயார்ப்படுத்தல்களும் கோட்ட மட்டத்திலான போட்டிகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகள் என்பனவும் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் காலையிலும் மாலையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
50 minute ago
20 Apr 2024