Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
அராலி தெற்கு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இக் கொள்ளை சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் 62 வயதுடைய கணவர், மனைவி மற்றும் மனையின் தாய் ஆகியோர் வசித்து வந்த நிலையில் அதிகாலை வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வயோதிபர்களை மிரட்டி 55 பவுண் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago