Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
யாழ்ப்பாணம் - கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள கடையொன்றில், வாளுடன் சென்று கொள்ளையிட முயன்ற இருவரை, கோப்பாய் பொலிஸார், இன்று (17) கைதுசெய்துள்ளனர்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த, 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிட முயன்ற இளைஞர்கள் இருவரை கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதன்போது குறித்த நபர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ,கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் இரும்பு பைப் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago