2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாள்வெட்டு: இளைஞன் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், இளைஞன் ஒருவரை, மானிப்பாய் பொலிஸார், நேற்று  (28) மாலை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து, 2 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த சம்பவத்துடன் குறித்த இளைஞனுக்குத் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்தே, அவரைக் கைதுசெய்ததாக, பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .