Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.தயா
சாவகச்சேரி பிரதேச சபை, வரணி உப பணிமனையின் அலுவலர் வீடு மீது நள்ளிரவில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல், இன்று நள்ளிரவு மட்டுவில் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீதே, வாள் மற்றும் கைக் கோடாரிகள் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனினும் வீட்டின் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏற்கெனவே, தென்மராட்சி பகுதிகளில் சாவாக் குழு எனப்படும் குழுவொன்றின் தொடர் தாக்குதல்களால், தென்மராட்சி மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago
19 Apr 2024