2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞன் படுகாயம்

Editorial   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

 

யாழ். நல்லூர் செட்டித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில், இளைஞனொருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ். சிவன் புதுவீதியைச் சேர்ந்த ஞானசேகரம் குமணேந்திரன் என்ற இளைஞனே கையில் படுகாயமடைந்துள்ளார்.

இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் துணிகளால் முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டு வந்த மூன்று பேர், வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .