2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டுவில் பன்றித்தளச்சி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர், மட்டுவில் கிழக்கு சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சரவணமுத்து வயது (72) எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இம்மாதம் 12ஆம் திகதி மோதியதில் விபத்துக்குள்ளாகியிருந்தார். தலையில் காயமடைந்த குறித்த நபரை, வீதியால் சென்றவர்கள் காப்பாற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, அவர் இன்று(19) உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை, சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .