2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மீட்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 மே 23 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டில் இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, குறித்த வீட்டிலிருந்து சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த  வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை பாவிக்கக்கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முன்னாள் போராளி புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .