2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளால், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால், இன்று (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது நேர்முகத் தேர்வை நிறுத்தி, முதலவாது நேர்முகத் தேர்வுடன் அரசாங்க வேலை வழங்கப்பட வேண்டும், ஏற்கெனவே உறுதியளித்தபடி அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பட்டதாரிகள்,

எமது பிரச்னைக்கு, உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், இந்தப் போராட்டமானது, தொடர் போராட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .