2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.நாவற்குழி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் இருந்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டு பஸ்ஸில் வந்து நாவற்குழி பகுதியில் இறங்கியவேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞன், நாவற்குழி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும், அவரிடம் இருந்து 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X