2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவர் கைது; டிரக்டரும் கைப்பற்றப்பட்டது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் டிரக்டர் வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று முன்தினம் (15) வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே, கஜூவத்தை பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிக் கொண்டு, முந்தல் பிரதேசத்திற்கு வந்த இந்த டிரக்டர் வண்டியைக் கைப்பற்றியுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்காவின் தலைமையிலேயே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .