2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கடந்த அரசாங்கம் புறக்கணித்தது’

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹிரன் பிரியங்கர


அருவக்காடு  குப்பைப் பிரச்சினை தொடர்பில், மக்கள் பாதிக்கப்பட்டிருந்த​போது, கடந்த அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், அதனை அவர்கள் பறக்கணித்தனரென, சிலாபம் ஆயர் வணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, வணாத்தவில்லு-சேரக்குளி தேவாலயத்தில், இன்று (25) விசேட ஆராதனைகளை நிகழ்த்தியதன் பின்னர் உரையாற்றும்போதே, அவர் மேற்​கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், புத்தளம் அருவக்காடு மக்கள் , கடந்த காலங்களில்  பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கினர். மக்களின் பிரச்சினைகள் குறித்து, கடந்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றார்.

தனிப்பட்ட ரீதியில் தான் அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், எவரும் குறித்த விடயம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லையெனத் தெரிவித்த அவர் இதனால், தான் மன​வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .