2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கற்பிட்டி பிரதேச சபையால் வாகனங்களுக்கு தொற்று நீக்கி

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பாலாவி - கற்பிட்டி வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களுக்கும் கொரோனா தொற்று நீக்கி தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாரின் ஒத்துழைப்பில் கற்பிட்டி பிரதேச சபை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பகுதியில் கற்பிட்டி பகுதியை நோக்கி உள்நுழையும் அனைத்து வாகனங்களுக்கும், இவ்வாறு கொரோனா தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன. 

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாப்பைபெற முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு,  பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகன சாரதிகளும், பயணிகளும்  முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .