2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

Editorial   / 2018 மே 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸீம் கிலாப்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் (SLITA) ஊடாக, அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலியவில், யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் (5) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், கல்னேவ அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ், இப்பலோககம அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் நளீம், அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் அமானுல்லாஹ், மற்றும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .