2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி, பொருள் உதவி

Editorial   / 2020 மே 01 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கட்டாரில் வாழ்கின்ற புத்தளம் சகோதரர்களின் பங்களிப்புடன் புத்தளத்தில் உலருணவுப் பொதிகள் மற்றும் பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

195 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு உதவி கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. 

ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான, தொழில் இன்றி தவிப்போர், விதவைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோர், மார்க்க கல்வியை கற்பிப்பவர்கள், சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் என இனம் கண்டு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில், பயனாளர்கள் தங்கள் நன்றிகளை இதன்போது தெரிவித்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X