2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புகையிரதத்தில் மோதுண்டு யானை பலி

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை கொலக்கனாவாடி பகுதியில் புகையிரதத்தில்  மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

கொழும்பிலிருந்து இன்று (02) அதிகாலை மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் வயது 35 என வெலிகந்த வனஜீவி அதிகாரியொருவர் தெரிவித்தார். பொலன்னறுவை ஜால கெலும் வனத்தில் இருந்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி  விபத்துக்களினால் இவ்வருடத்தில் 160 க்கு மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .