2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

Editorial   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள  நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 51 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொலன்னறுவை பராக்கிரம சமுத்தின் நீர் மட்டம் 81 சதவீதமாகவும், மின்னேரிய நீர்த்தேக்கத்தின்  நீர் மட்டம் 39 சதவீதமானகவும், அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கௌடுல்ல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 25 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில், மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X