2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வில்பத்துவில் வேட்டையாடிய குழு கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய வனாந்தரத்தில், நீண்ட காலமாக மிருகங்களை வேட்டையாடி வந்த எழுவரை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 02 துப்பாக்கிகள், 02 கத்திகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேக நபர்களால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் பறவை ஒன்றும் இறைச்சி வகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .