2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

25 வருட பூர்த்தியில் Siam ஹவுஸ்

Editorial   / 2018 மே 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள தாய்லாந்து உணவகமான Siam ஹவுஸ், தனது 25 வருட பூர்த்தியை இந்த மாதம் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, இன்று முதல் (24) 31ஆம் திகதி வரை விசேட தாய்லாந்து உணவுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 

தாய்லாந்தின் நான்கு பிராந்தியங்களின் புகழ்பெற்ற உணவுகளை இதன் போது தயாரித்துப் பரிமாறத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, தாய்லாந்தின் விசேட சமையல் நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  Siam ஹவுஸில் வழமையாகப் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு மாறான தாய்லாந்தின் விசேடமான உணவு வகைகள் இதன்போது வழங்கப்படும்.  

தனது 25 வருட நிறைவை முன்னிட்டு Siam ஹவுஸ் விசேட தபால் முத்திரை ஒன்றையும் வெளியிடத் தீர்மானித்துள்ளது.   

தனது வெள்ளி விழா குறித்தும் Siam ஹவுஸின் வரலாறு தொடர்பிலும் பென்ஜாரொங் பிரைவட் லிமிட்டெட் தலைவர் லயனல் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “1993 இல், இலங்கையில் தாய்லாந்தின் உணவை அறிமுகம் செய்த முதலாவது உணவகமாக நாம் திகழ்ந்தோம். அக்காலப்பகுதியில் நாம் புரட்சிகரமான ஓர் உணவகமாக அமைந்திருந்ததுடன், தாய்லாந்திலிருந்து எமது உணவு தயாரிப்புக் குழுவை அழைத்து வந்திருந்தோம். எமது தலைமைச் சமையல் நிபுணரும் தாய்லாந்தைச் சேர்ந்தவராகக் காணப்பட்டார். இன்றும் நாம் வழங்கும் பிரத்தியேகமான தாய்லாந்தின் உணவு வேளைகள் மற்றும் தொடர்ச்சியாகப் பேணி வரும் நியமங்கள் போன்றவற்றுக்காக நாம் கீர்த்தி நாமத்தை பேணி வருகிறோம். தொடர்ச்சித்தன்மையின் மீது எமது அர்ப்பணிப்பு மற்றும் உயர் நியமங்களை மேம்படுத்தல் போன்றன வெற்றிகரமான செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமைந்துள்ளன. அடுத்த 25 வருடங்களை நாம் எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் அடுத்த தலைமுறைக்கும் தாய்லாந்தின் விசேட உணவுகளைப் பெற்றுக் கொடுக்க புதிய உத்வேகத்துடன் காத்திருக்கிறோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .