2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

HNB பினான்ஸ் தங்கநகை அடகு சேவை விஸ்தரிப்பு

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

HNB பினான்ஸ், தங்க நகை அடகுச் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் திருகோணமலை, வவுனியா, கந்தளாய் ஆகிய HNB பினான்ஸ் கிளைகளில் தங்க நகை அடகுச் சேவைகளை அண்மையில் ஆரம்பித்துள்ளது.   

வவுனியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தங்க நகை அடகுப் பிரிவுகளை HNB பினான்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த பிரபாத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் HNB பினான்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

வடக்கு கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள HNB பினான்ஸ் கிளைகள் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட தங்க நகை அடகுச் சேவை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த HNB பினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் “போட்டித் தன்மை நிறைந்த நிதித்துறையில், போட்டியைச் சமாளித்து முன்னேறிச் செல்வதற்கு வாடிக்கையாளர்களது நம்பிக்கையை வெல்ல வேண்டியது பிரதானமாகும். குறித்த காலத்தில் மீளத் திருப்ப முடியாது போன தங்க ஆபரணங்களை ஏலத்தில் விடாமல், வாடிக்கையாளருக்கு நிவாரணம் வழங்க HNB பினான்ஸ் தங்க நகை அடகுச் சேவை நடவடிக்கை எடுப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தச் சேவை தொடர்பாக நன்மதிப்பு கிடைக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” எனக் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .