2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

eZ Cash வங்கிக் கணக்குகள் மூலம் ‘Top-up’ செய்யும் வசதி

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபைல் பணம் மற்றும் கொடுப்பனவு சேவையை வழங்கும் eZ Cash, அதன் வாடிக்கையாளர்களுக்கு eZ Cash கணக்கை வங்கி கணக்கின் மூலம் Top-up செய்வதற்கான ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  

வங்கி Top-up சிறப்பம்சமானது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட eZ Cash QR ஐ ஸ்கான் செய்வதன் மூலம், எந்தவொரு eZ Cash வர்த்தக நிலையத்துக்கும் சென்று இலகுவாகவும் சௌகரியமாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக உள்ளது.

எந்தவொரு திறன்பேசியிலும் eZ Cash App மூலம், இந்தச் சிறப்பம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். eZ Cash வாடிக்கையாளர்கள் தங்களின் நடைமுறைக் கணக்கு,  சேமிப்பு கணக்கின் மூலம், மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி, eZ Cash கணக்கை Top-up செய்துக்கொள்ள முடியும்.

புதிய மேம்படுத்தப்பட்ட இந்தச் சிறப்பம்சத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் எந்தவோர் இடத்திலிருந்தும் எந்நேரத்திலும் அணுகிட முடியும்.   

வாடிக்கையாளர்கள் தங்களின் eZ Cash app interface இலிருந்து Bank Account’ icon ஐ தெரிவு செய்து, வங்கி விவரங்களை உறுதிப்படுத்தி, பதிவு செய்ததன் பின்னர், தொகையை பதிவு செய்வதன் மூலம் இலகுவாக அவர்களின் டிஜிட்டல் eZ Cash கணக்கை Top-up செய்துகொள்ள முடியும்.   

தற்போது Lanka Clear JustPay platform மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் eZ Cash Top-up களை பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சிறப்பம்சமானது, இலங்கை மத்திய வங்கியின் கூட்டு நிறுவனமான LankaClear மற்றும் இலங்கையில் இயங்கும் அனைத்து உரிமமும் பெற்ற வணிக வங்கிகளினாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .