2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.  மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ளன என்றும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .