2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவை

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு வசதியேற்படுத்துவதற்காக, நடுமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களைச் சேவையில் ஈடுபடுத்தி வருவதாக, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நடமாடும் வங்கி இயந்திரங்கள் பயணிக்கும் இடங்கள்,நேரங்கள் ஆகியன,வங்கியின் இணையத்தளத்திலும் வங்கியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் நாள்தோறும் அறிவிக்கப்படுமெனவும் வங்கி தெரிவித்தது.

கொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கி இயந்திரங்கள் மூலமாக ஏ.டி.எம் கார்ட்களைக் கொண்டு மாத்திரமல்லாமல் வங்கிப் புத்தகங்களைக் கொண்டும் பணத்தை மீளப்பெறக்கூடிய வசதி காணப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, ஏனைய அடிப்படைவங்கிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இதேவேளை,ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்பட்ட பகுதிகளிலுள்ளஅனைத்து கொமர்ஷல் வங்கிக் கிளைகளும் காலை 9 முதல் நண்பகல் 12 மணிவரையில் மூன்று மணித்தியாலங்கள் செயற்பட்டு, அத்தியாவசியவங்கிச் சேவைகள் வழங்கப்படுமென வங்கி தெரிவித்தது.

அதேபோல், ஊரடங்கு நேரத்திலும் வாடிக்கையாளர்களின் அவசரமான தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தெரிவு செய்யப்பட்டகிளைகளை வங்கிதிறந்துவைக்குமெனவும் வங்கி குறிப்பிட்டது.

இக்காலப்பகுதியில் இணையவங்கிச் சேவையைப் பயன்படுத்தல், 'ஃப்ளாஷ்' டிஜிட்டல் கணக்கைஆரம்பித்தல் ஆகியன தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான ஏற்பாடுகளையும் வங்கி ஏற்படுத்தியுள்ளது. 

இச்சேவைகளை ஆரம்பிப்பதற்குக் கிளையொன்றுக்குச் செல்லவேண்டிய தேவையை இல்லாதுசெய்து, தாமாகவே இவ்வசதிகளுக்குப் பதிவுசெய்யும் ஏற்பாடு மூலமாகவே இது இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இணையவங்கிச் சேவைக்கான விண்ணப்பத்தை வங்கியின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பப்படிவமானது கணக்குரிமையாளரின் தேசியஅடையாளஅட்டையின் இரண்டு பக்கங்களின் புகைப்படங்களோடு, வழங்கப்பட்டமின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பப்படவேண்டும். 

இவ்வசதியைஆரம்பிப்பதற்குத் தொலைபேசி மூலமாக வங்கியின் பணியாளரொருவர் அழைப்பை ஏற்படுத்துவார்.

வங்கியின் தனித்துவமான டிஜிட்டல் வங்கிச் செயலியான ஃப்ளாஷ்,அப்பிள் அப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கப்படமுடியும். 

இதிலும் தாமாகவே பதிவுசெய்து,வசதியை ஆரம்பிக்க முடியும். அடையாளப்படுத்தும் ஆவணங்களை அனுப்பி,வாடிக்கையாளர் தம்மைப் பதிவுசெய்த பின்னர்,வங்கிக் கிளைக்குச் செல்லாமல் பல்வேறானநிதியியல் பரிவர்த்தனைகளில் ஈடுபடமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .