2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சித்திரைப் புத்தாண்டை மகிழ்விக்கும் BOC Cards

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், சிங்கள புது வருடப் பண்டிகையை ஒட்டி, குடும்பமாகக் கொள்வனவுகளில் ஈடுபடும் BOC Cards வைத்திருப்போருக்கு, மிக உயர்ந்தளவிலான விலைக்கழிவுகளை இலங்கை வங்கி வழங்கவுள்ளது.

 ‘டெபிட்காட்’, கடனட்டை இரண்டுக்கும் நாடுமுழுவதிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிரபல்யமான நிறுவனங்களில் இந்த விலைக்கழிவு சலுகைகள் செல்லுபடியாகும். இந்தப் பண்டிகைக்கால  சிறப்புத்தள்ளுபடிக் காலம், ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலும் மற்றும் தூர இடத்துக்கான சுற்றுலா ஜூலை மாத இறுதி வரையிலும் செல்லுபடியாகும். 

முக்கியமாக இந்தப் பண்டிகைக்கால பொருட்கொள்வனவின்போது, உடுபுடவைகள், காலணிகள், அணிகலன்கள், கொட்டல் மற்றும் ஸ்பா, உணவகங்கள், பொம்மைக் கடைகள், புத்தகக் கடைகள் ஆகியனவற்‌றில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

பொருட்கொள்வனவில் ஈடுபடும்போது, வாடிக்கையாளர்கள் பெருந்தொகையான பணத்தை வைத்திருக்கிறோம் என்ற பயமின்றி, நிம்மதியாக கொள்வனவில் ஈடுபட, இத்தகைய நவீன வசதிகள் இடமளிக்கின்றன. 

“இலங்கை வங்கியின் அட்டைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தகுந்தவாறு, அவர்களின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர் சிறப்பான நிதிமுகாமைத்துவத்தைப் பேணிக்கொள்ள முடியும். இந்த அட்டைகள் மிகவும் பாதுகாப்பானவை என உலகம் முழுவதும் அங்கிகரிக்கப்பட்டவை ஆகும். 

இலங்கை வங்கியின் விசா அட்டைகள் பிளாட்டினம், சர்வதேச தங்கம், சர்வதேச கிளாசிக் எனவும் மாஸ்டர் கார்ட்ஸ் டைடானியம்  மற்றும் Flexi cards உம் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. 

இலங்கை வங்கியின் டெபிட் காட் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில், நாடுமுழுவதிலும் உள்ள 923 ஏரிஎம், சிடிஎம் இயந்திரங்களின் ஊடாக மீளப்பெறவும் பணப்பரிமாற்றம் செய்யவும் முடியும்” என உற்பத்தி மற்றும் வங்கி அபிவிருத்தி பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே.பி. சால்காடோ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கையில் மிகமுக்கியமான பண்டிகையாக் கொண்டாடப்படும் இக்கால கட்டத்தில், இலங்கை வங்கி, தனது வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்து உணர்ந்து கொண்டதன்  நிமித்தம், டெபிட் காட், கடனட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிரபல்யமான வியாபார நிலையங்களில் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓரேஞ், மை கலக்ஷன், குமரன்ஸ், ஹவுஸ் ஒவ் பஷன், ஹமீடியா, றிச் லுக் பஷன், சுப்பர் பஷன், ஸ்பிரிங் அன் ஷமர், அடிடாஸ், சாரி மந்தீர், என்வோய் மன்ஷன், எம்மா, டிலிகன்ஸ், ஜிசிஎஸ் பஷன், காலி சிற்றி, சுனிமால்ஸ், அந்தும்அந்தும், பெல்ரோ, அடிரி இன்பினிற்றி, ஹம்மா, ஷேர்ட்வேர்க், கொரக்கட்டைல், பெவேர்‌றி ஸ்றீட், பஷன் பக், கூல் பிளனட், சிஐபி, ஈஸ்ட்ஸ்டார் கைத்தறிகள், ஹேமன்த டெக்ஸ்டைல், ஷ்வன்ஸ், பாட்டா, டிஐ லெதர், பேபி கெயார், த பக்ரி அவுட்லெட், ஒரோரா மற்றும் லண்டன் ஸ்டோர்ஸ் ஆகிய நிறுவனங்களில் பொருள்கொள்வனவில் ஈடுபடும்போது, 50 சதவீதம் வரையில் விலைக்கழிவு வழங்கப்படுகின்றது. 

மற்றும், பின்வரும் பிரபல்யமான நகையகங்களான Fior Drissage, ராஜா ஜுவலறி, ஷாமத்ஹாரா, ஸ்டோன் அன் ஸ்ரிங் மற்றும் லவ்வர் என்பனவாகும்.

இவற்றைவிட,  இலங்கை வங்கியின் அட்டைகளைப் பயன்படுத்துவோர் தமது ஓய்வு நாள்களையும் சந்தோசமாகக் கழிக்கக்கூடிய வகையில் விலைக்கழிவுகளுடன் ஏற்பாடுகள் உள்ளன. அவற்றில், Lavendish Beach Resort Unawatuna, Villa Pinnawala, Royal Hills Nuwara eliya, The Yala adventure, Queens Hotel Kandy, Lavanga Resort  and spa  போன்றவையாகும். 

இலங்கை வங்கியின் அட்டைகள் வைத்திருப்போருக்கு இவைதவிர வேறுபல அனுகூலங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கடனட்டைக்கு மிகவும் குறைந்த வட்டிவீதத்துடனும் இலவச காப்புறுதி பெறுகையும் (நிரந்த அங்கவீனம் தங்க அட்டைக்கு 100,000ரூபாய், கிளாசிக் காட் 50,000 ரூபாய்களும் விமானப் பயணத்தின் போது பயணப்பொதி தொலைதல், அவசரநிலை வைத்திய சிகிச்சை  போன்ற அனுகூலங்களும் கிடைக்கும். 

அட்டைகளினூடாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின் போதும் குறுந்தகவல் சேவை எந்த தொலைபேசி இலக்கத்தக்கும் அனுப்பிவைக்கப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .