2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செலான் வங்கியிடமிருந்து பெறுமதியான பரிசுகள்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, செலான் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல பெறுமதியான பரிசுகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் விசில் கேத்தல்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும் பல அனுகூலங்களும் அடங்கியுள்ளன.

ஏப்ரல் இரண்டாம் திகதி முதல், மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இந்தப் பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.  

செலான் டிக்கிரி, செலான் Seylfie, செலான் income saver, செலான் சேமிப்புக் கணக்கு அடங்கலாக செலான் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சகல வாடிக்கையாளர்களுக்கும் மேற்படி அன்பளிப்புகளை, பின்வரும் தொகையை வைப்புச் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்புச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசில் கேத்தல் ஒன்றைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளலாம்.

செலான் டிக்கிரி சேமிப்பு கணக்கில் 9,500 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்புச் செய்யும் போது, சிறுவர்களுக்கு மூன்று Blocky விளையாட்டு பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

டிக்கிரி கணக்கில் மேற்கொள்ளப்படும் 19,000 ரூபாய்க்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 6 Blocky விளையாட்டு பொருட்கள் பரிசாக வழங்கப்படும். மேலும், செலான் டிக்கிரி கணக்கொன்றை புதிய வாடிக்கையாளர் முதன் முறையாக ஆரம்பிக்கும் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அன்பளிப்புகளுக்கு மேலதிகமாக, விசேட புத்தாண்டு அன்பளிப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

செலான் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் திலான் விஜேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “சேமிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இது அமைந்துள்ளது. ‘அன்புடன் அரவணைக்கும் வங்கி’ எனும் வகையில், செலான் வங்கியின் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டை கொண்டாடி மகிழ பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாம் பல விறுவிறுப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். 1992இல் நாம் அறிமுகம் செய்திருந்த செலான் டிக்கிரி கணக்கு, இதற்குச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். வைப்புச் செய்யப்படும் தொகையைப் பொறுத்து, அன்பளிப்புகளை வழங்கியிருந்த இலங்கையின் முதலாவது சிறுவர் சேமிப்புக் கணக்காக இது அமைந்திருந்தது. கடந்த காலத்திலிருந்து செலான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பரந்தளவு பெறுமதியான பரிசுகளை வழங்கி வருகிறோம். இதனூடாக அவர்களுக்கு அதிகளவு சேமிக்க முடிந்துள்ளதுடன், நேர்த்தியான நிதிப் பழக்க வழக்கத்தையும் கொண்டிருக்க முடிந்துள்ளது” என்றார்.

சிறந்த வங்கியியல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, செலான் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சகல வயதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மனம்மறவாத புத்தாண்டு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .