2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுகிறது HNB Finance

Editorial   / 2020 மே 31 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குனரான HNB Finance கொழும்பு பங்குச் சந்தையில் ஊக்குவித்தல் பலகையில் பட்டியலிடப்பட்டதனால் முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஊக்குவித்தல் பலகையில் பதிவு செய்த முதலாவது நிறுவனம் என்பதுடன் அண்மையில் நடைபெற்ற அடிப்படை பங்கு விநியோகத்தின் வாயிலாக பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இந்த அடிப்படை பொது பங்கு வெளியீடு ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் 32% அதிக பங்களிப்பு கிடைத்தமையின் விளைவாக HNB Finance தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை நன்றாக பிரதிபலிக்கின்றது.

பங்குச் சந்தை முதலீடுகளின் வெளிப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த HNB Finance நிறுவனத்தின் தலைவர் ஜொனதன் அலஸ்,

“பங்குச் சந்தையின் ஊக்குவித்தல் பலகையில் பதிவு செய்வதற்கு முன்னர், கடந்த காலங்கள் முழுவதும் HNB Finance நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி செயல்திறன் நேரடியாக பாதிக்கப்பட்டது என்பதே எனது கருத்தாகும். ஆகையால், எங்கள் முழு வர்த்தகத்தையும் நேர்மறையான மாற்றத்தை நோக்கி நகர்த்துவதற்கான புதிய வர்த்தக மூலோபாயத்தை நாங்கள் மேற்கொள்வதால் அடுத்த சில வருடங்களுக்கு நிறுவனத்திற்கு சிறப்பாக இருக்கும். விசேடமாக புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் சேர்க்கையை புதிய கண்டுபிடிப்புக்களின் ஊடாக சிறந்த சேவையை மேம்படுத்தி என்றுமில்லாத வகையில் விசேடமாக மேல் நோக்கி கொண்டுவர HNB Finance நிறுவனத்துக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என நம்புகிறேன். முழுமையான சேவையை வழங்கும் நிதி சேவைகள் நிறுவனமாக, நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு மற்றும் பொதுவாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பதே எனது ஆசையாகும்“ என தெரிவித்தார்.

HNB Finance நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதுடன் மூலோபாய முதலீட்டாளர்கள் பலர் மேற்கொண்டு சென்ற வர்த்தக நடவடிக்கைகள் முறைகளை செயல்திறனுடன் மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். மேலும் நிறுவனத்தின் அடிப்படை தகவல்களை தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை வியாபாரத்தை இலக்காகக் கொண்டு மென்மையான நடவடிக்கைகள் முறைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தகவல்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்குள் செயற்பாட்டு செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த HNB Finance இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்,

“கொழும்பு பங்குச் சந்தைக்கு பிரவேசித்து கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள கிடைத்தமையானது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். விசேடமாக பங்குச் சந்தைக்கு பிரவேசித்ததற்காக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை பங்கு விநியோகம் இடம்பெற்ற தினத்திலேயே பிரமாண்டமான ஒத்துழைப்பு கிடைத்ததன் மூலம் நிறுவனத்திற்கு காணப்படும் முதலீட்டு நம்பிக்கையை எம்மால் பார்க்க முடிந்தது. இதனால் உரிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் முகமாக அதன்மூலம் மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியுமென நான் நம்புகிறேன்.

“இலங்கையில் மைக்ரோ நிதி சேவைத் துறையில் முன்னோடி நிறுவனமாக இருத்தல், உரிய பல்வகைப்படுத்தப்பட்ட நிதி சேவைகள் பலவற்றை கொண்டுசெல்லும் வழியில் மிகவும் உறுதியாக எமது சேவையை நடத்திச் செல்வதற்கு முடிந்ததுடன் தற்போது எமது நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் முழுமையான டிஜிட்டல் மறுசீரமைப்புக்கு உட்படுத்த நாம் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதுடன் அதன் நன்மைகளை எதிர்காலத்தில் எமக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்பது எனது நம்பிக்கையாகும்.

“சொத்துக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவத்தின் விவேகமான செயற்பாடுகளை மேம்படுத்தி ஒழுங்கு முறையான வியூகத்தை பலப்படுத்துவதற்கும் எமது கவனம் திரும்பியுள்ளது. அத்துடன் எங்களது மறுசீரமைப்பானது தரமான மனித வளங்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் இலக்குகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவுகிறது என்பதே எமது மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அடங்குகின்றன” என தெரிவித்தார்.

HNB Finance நிறுவனம் தமது டிஜிட்டல் சேவை மேம்பாடு தொடர்பாக பாரிய முதலீடுகளை மேற்கொள்வதுடன் இணையத்தளம் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகள் ஊடாக தமது நிதி சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் மிகவும் செலவு குறைந்த செயற்றிறனுடன் மிகவும் திறமையான சேவைகளை வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம். விசேடமாக உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் பின்னணியை மேற்கொள்ளும் இந்த முதலீடுகள் காலத்திற்கு ஏற்றவையாக கருத முடியும்.

இலங்கையில் மதிப்பீட்டு கடன் இடர் வகைப்படுத்தலுக்கு அமைய 'A(lka)Stable' இடத்திற்கு உயர்ந்துள்ள HNB Finance நிறுவனம் தமது மூலோபாய முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்குள் செயற்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக மேம்படுத்துவதற்காக மனிதவள முகாமைத்துவ துறையில் புதிய அணுகுமுறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிய நிதி சேவைகள் பலவற்றை தமது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதுடன் இந்த சேவைகள் நிதித் துறையில் ஒரு திரும்பு முனையாக அமைவதுடன் HNB Finance இலச்சினையை பலப்படுத்துவதாகவும் அமையும்.

HNB Finance நிறுவனம் ஹட்டன் நெஷனல் வங்கியின் துணை வர்த்தகமாக இருப்பதுடன் நிறுவனத்தின் 51% பங்குரிமையை ஹட்டன் நெஷனல் வங்கி வைத்திருப்பதுடன் 38.86% பங்குகளை பிரைம் லாண்ட் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மைக்ரோ நிதி துறையில் நிலையான இடத்தைக் கொண்டுள்ள நிறுவனமாக இந்த துறைக்கான பிரமாண்டமான ஒத்துழைப்புக்களை HNB Finance நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

செயல்படாத நிதி நிறுவனங்களை கையகப்படுத்தல் குறித்து இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட நியமங்களுக்கு அமைய அவர்களது அனுமதியுடன் 2011ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் உரிமை பெற்றுக் கொண்டதனால் நிறுவனம் இங்கு பூரண உரிமையைப் பெற்றுக் கொண்டதுடன் நிறுவனத்தின் இலச்சினையான பிரைம் கிராமீன் என மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.

நிறுவனத்தை கையப்படுத்தும் போது பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் பிரைம் லாண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ ஊழியர்களின் அதிநவீனவிதமான முகாமைத்துவ கொள்கைகள் காரணமாக இரண்டு வருடங்களுக்குள் அந்த நிலைமை முழுமையாக மாற்றமடைந்து உறுதியான நிதி நிறுவனம் என்ற அடித்தளத்தை அமைப்பதற்கு பிரைம் கிராமீ நிறுவனத்திற்கு முடிந்தது. அத்துடன் பல வருடங்களுக்குள் பிரைம் கிராமீ லாபம் பெற்றுத் தரும் நிதி நிறுவனமாக மாற்றுவதற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கு முடிந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X