2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீட்டுப்பாவனை மின் சாதனங்களைப் புதுப்பிக்கும் துரித சேவையை வழங்கும் அபான்ஸ்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலத்திரனியல் மற்றும் வீட்டுப்பாவனை, மின் உற்பத்திகளுக்குச் சேவையைப்  
பெற்றுக்கொள்ளுதல் மற்றும் புதுப்பித்துக் கொள்வதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் கால கட்டத்தில், அதற்கான தேவைகளைச் சிறப்பாக பூர்த்தி செய்து, சிறப்பான சேவையை அபான்ஸ் சேவைப் பிரிவு வழங்கி வருகிறது.   

அந்த வகையில், வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் அல்லது குறித்த கிளையில் இருக்கும் அந்தத்  தருணத்தில், வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் திட்டத்தை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் வெள்ளவத்தை அபான்ஸ் சேவை நிலையம் மேற்கொண்டு வருகிறது.  

இதன் அடிப்படையில், மிகவும் குறுகிய காலத்தில் உயர் தரத்திலான, விற்பனையின் பின்னரான துரித சேவையை, அபான்ஸ் வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்கள் பழுதடைந்த  உற்பத்தியை, சேவை நிலையத்தின் துரித சேவைக் கவுண்டரில் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் 30 நிமிடங்கள் வரை வாடிக்கையாளர் அந்த இடத்தில் தேநீர் அல்லது குளிர்பானம் அருந்தும்  போது, வாடிக்கையாளரின் பொருள் பழுதுபார்த்துக் கொடுக்கப்படும்.  

வாடிக்கையாளருக்குச் சேவை நிலையத்துக்குப் போவது கடினமாக இருந்தால் உங்கள் அருகாமையில் உள்ள அபான்ஸ் கிளையில் உங்கள் பழுதடைந்த உற்பத்தியை ஒப்படைத்து  துரித சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித தொந்தரவும் அல்லது அசௌகரியமும்  இல்லாமல், மிகவும் சிறப்பான ஒரு சேவையை உங்கள் தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியும்.  

தமது வாடிக்கையாளர்களின் வசதியை எப்போதும் கருத்தில் கொண்டு செயல்படும் அபான்ஸ்  சேவை நிலையம், நாடளாவிய ரீதியில் 17 சேவை நிலையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சேவை முகவர்கள் 100 க்கும் அதிகமானவர்களை கொண்டு இயங்கி வருகிறது. 

மேலும் நாடளாவிய ரீதியில் மிகச்சிறந்த சேவையையும் அசல் உதிரிப்பாகங்களையும் வழங்கி வருகிறது.  

அபான்ஸ் வழங்கி வரும் உலகின் முதல்தர LG, ஹுவர், மிட்சுபிஷி, இலெக்ட்ரிக், இலெக்ட்ரோலெக்ஸ், எல்பா உள்ளிட்ட, பல விசேட உற்பத்திகளுக்கு விற்பனையின் பின்னரான சிறப்பு சேவையை அபான்ஸ் சேவை நிலையம் வழங்கி வருகிறது. 

சேவைகள் மற்றும்  புதுப்பித்தல்களை மேற்கொள்ளும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு வெளிநாட்டு அனுபவங்கள்  மற்றும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகிறன.  

எல்லோருக்கும் எப்போதும் சேவை என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் அபான்ஸ் சேவை நிலையத்தின் சேவைகளை அபான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும்  இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை அபான்ஸ் சேவைப்பிரிவு வழங்கியுள்ளது.  

0115 555 888 என்ற துரித இலக்கத்தை அழைத்து அபான்ஸ் சேவை நிலையத்தால்  வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக அறிந்துகொள்ளுங்கள். வெள்ளவத்தை, தம்புள்ளை, காலி, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா,  யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய பிரதான  நகரங்களில் உள்ள அபான்ஸ் சேவை மத்திய நிலையங்களில் அதிசிறந்த சேவைகளை  வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .