2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனைத்து தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நாளை (15) பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

தைப்பொங்கல் தினமான நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறும்.

குறிப்பாக இறைவன் அழித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதோடு, விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .