2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரச மரமும் நகர்த்தப்படுகிறது

Editorial   / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி இரணைமடுகுளத்தினகருகில் காணப்பட்ட அரச மரம் படையினரால் அங்கிருந்து அகற்றப்படுகின்றது.

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான் பகுதிக்கருகில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை, அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில், தற்போது அங்கிருந்த அரச மரமும் பிடுங்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியை ஏற்படுத்தி மரம் பாதிக்காத வகையில், நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த அரச மரம் மற்றும் ஏற்கனவே குளக்கரையில் இருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலை ஆகியன, பிறிதொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .