2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு மறியல்

Yuganthini   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, தலைமன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்த 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ, இன்று (25) உத்தரவிட்டார்.

இந்தியா - கூடங்குளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் உள்ளடங்களாக 6 மீனவர்கள் படகு ஒன்றில், நேற்று (24) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள், இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் ​ரோந்து கடமையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .